திருப்பூரில் மத புத்தகம் கொடுத்து மதம் மாற்ற முயற்சி - தடுத்து நிறுத்திய பா.ஜ.க-வினர்!

Update: 2022-05-16 10:53 GMT

திருப்பூரில், பெண்கள் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்த பகுதியில் பா.ஜ.க-வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் பெண்கள் சிலர் ரோட்டில் நின்று கொண்டு, பொதுமக்களிடம் கிறிஸ்தவ கையேடுகளை வழங்கி கொண்டிருந்தனர்.

இது குறித்த தகவல், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க கொங்கு நகர் மண்டல நிர்வாகிகள் அவர்களை முற்றுகையிட்டனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, மதமாற்றத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வசம் ஒப்படைத்தனர். அவர்களிடம் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,போலீசில் புகார் மனு அளித்தனர்.

Inputs From: Dinamalar

Similar News