தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு.. இன்று 503 பேருக்குத்தான் பாதிப்பு.!
தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு.. இன்று 503 பேருக்குத்தான் பாதிப்பு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இன்று 600க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஆரம்ப காலகட்டத்தில் 10 ஆயிரத்தை கடந்து சென்ற கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த தடுப்பு நடவடிக்கையே காரணம்.
இந்நிலையில், இன்று 503 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,36,818ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் 12,339 ஆக உயர்ந்துள்ளது.