தமிழகத்தில் இன்று 454 பேருக்கு கொரோனா.. 6 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று 454 பேருக்கு கொரோனா.. 6 பேர் உயிரிழப்பு.!

Update: 2021-02-17 18:26 GMT

தமிழகத்தில் இன்று 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதால் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று 0க்கு கீழ் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில இன்று 454 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,46,480 ஆக உயர்ந்துள்ளது.

இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 462 பேர், இதன் மூலம் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,29,850 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று இன்று 6 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,438 ஆக அதிகரித்துள்ளது.

Similar News