சென்னை நட்சத்திர ஓட்டலில் 80 ஊழியர்களுக்கு கொரோனா.!

சென்னை நட்சத்திர ஓட்டலில் 80 ஊழியர்களுக்கு கொரோனா.!

Update: 2021-01-02 07:15 GMT

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் வேலையில் தற்போது புதிய வகை வைரஸ் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியிலும் 300க்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிண்டி ஐ.ஐ.டி.யில் ஒரே நேரத்தில் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எந்தவித அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று இருந்ததால் 80 பேரும் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த நட்சத்திர ஓட்டலில் நடக்க இருந்த விழாக்கள் அனைத்தும் வருகிற 10-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Similar News