கொரோனா அடுத்த அலை.. 2 மாதங்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்.!

கொரோனா அடுத்த அலை.. 2 மாதங்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்.!

Update: 2021-01-30 16:01 GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை விஞ்ஞான ரீதியில் அணுக வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. அதே போன்று மற்ற மாவட்டங்களில் தினமும் 15 என்ற அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. எங்களை பொறுத்தவரையில் பூஜ்யத்தை நோக்கி செல்வதே இலக்கு.

மேலும், தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை நடைபெறுகிறது. கொரோனா பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடப்படும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போட்டுக்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அடுத்த அலை வராமல் தடுக்க வருகின்ற 2 மாதங்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

Similar News