ஆளுங்கட்சி கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை என வன்முறை தலை விரித்தாடும் திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகள் கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை கலாச்சாரம் தலைதூக்குவதால் அங்கு சட்டம் ஒழுங்கு சீரழியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகள் கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை கலாச்சாரம் தலைதூக்குவதால் அங்கு சட்டம் ஒழுங்கு சீரழியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கந்தக்கோட்டை என கிராமத்தில் கத்தி, அரிவாள், பெட்ரோல் குண்டு உள்ளிட்ட பொருள்களுடன் நள்ளிரவில் 30 பேர் கொண்ட கும்பல் குடியிருப்புகளை சேதப்படுத்தி ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் தாக்கி, தடுக்க முயன்ற ஐந்துக்கு மேற்பட்ட நபர்களை தாக்கியும் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் கூறியதாவது, 'நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா இவர் மினி வேனில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். திங்கள் கிழமை காலை 8 மணிக்கு பள்ளப்பட்டி'யை அடுத்த கந்தப்பக்கோட்டை பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அவர் மீன் ஏற்றி வந்த மினி வேன் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வழியே பைக்கில் வந்த அப்பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் மீன் வேனை ஓரமாக நிறுத்தி வியாபாரம் செய்யுமாறு கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது, ஆதித்யா அங்கிருந்து சென்றுவிட்டார் வியாபாரத்தை முடித்துவிட்டு அருகில் உள்ள தோப்பில் நண்பர்களுடன் சேர்ந்து மீன் வேனை கழுவிக் கொண்டு இருந்தனர்.
வாக்குவாத பிரச்சினைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கலைச்செல்வன் தரப்பு ஆதித்யா இருந்த தோப்பிற்கு வந்து அவரது மீன் வேனை அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக இரு தரப்பும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொழுது அந்த பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்துக் கொள்வதாக கூறி விட்டார். ஆனால் அன்று மாலையே இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை இருந்துள்ளது.