மருத்துவர் சாந்தா மறைவு ஈடுசெய்ய முடியாதவை! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

மருத்துவர் சாந்தா மறைவு ஈடுசெய்ய முடியாதவை! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Update: 2021-01-19 13:20 GMT

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இதயநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் சாந்தா, இன்று அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் பல லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார்.

அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். மருத்துவர் சாந்தாவின் உடல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், சாந்தாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவ்வாறு அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News