வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு 'இ பாஸ்' கட்டாயம்.. தமிழக அரசு.!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வேறு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வேறு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயம் இ பாஸ் வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக 500க்கும் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பொது வெளியில் முககவசம் இன்றி மக்கள் நடமாடி வருகின்றனர். இதன் காரணமாகவும் தொற்று பாதிப்பு அதிகரிக்க ஒரு வகையில் காரணமாக அமைந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிலும் தற்போது தமிழகத்தில் தேர்தல் நேரம் என்பதால் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து கொண்டு செல்வது சிறந்தது.