சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி! இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி! இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

Update: 2021-01-20 09:21 GMT

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தனது வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது. அதில் முதற்கட்டமாக இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல் போன்ற பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்கியது. இதற்கு என்று மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்குவதற்கு, மற்றும் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பள்ளிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர். அதில் உரிய முறையில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், வாக்காளர் பெயர் திருத்தப்பணிகள் முடிடைந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் வெளியிடப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பெயர் பட்டிலை வெளியிடுகின்றனர். புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பனவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக அதிகாரிகள் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News