கோவை அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி.. விவசாயி தலைமறைவு.!

கோவை அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி.. விவசாயி தலைமறைவு.!

Update: 2021-01-05 14:28 GMT

கோவை அருகே வயல் வெளியைச் சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட குளத்தேரியில் துரை என்ற ஆறுசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தைச்சுற்றி அவர் மின்வேலி அமைத்துள்ளார். 

இந்நிலையில், மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை ஒன்று இறந்துவிட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். அதில், துரையின் பண்ணை வயலைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு, மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடி இரும்பு கம்பி வேலிக்கு நேரடியாக மின்சாரம் செலுத்தியுள்ளதும், அதன் காரணமாகவே யானை உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், துரை தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

Similar News