ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் நீடித்து வரும் வருமான வரித்துறை சோதனை.!

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் நீடித்து வரும் வருமான வரித்துறை சோதனை.!

Update: 2020-12-17 16:28 GMT

ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஈரோடு காளைமாடு சிலை அருகே உள்ள தங்க பெருமாள் வீதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஈரோடு மதுரை, கோவை உள்பட் மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பேருந்து போக்குவரத்து, மசாலா பொருட்கள் உற்பத்தி நிறுவனம், கல்குவாரி, கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களும் நடத்தப்படுகிறது.

எனவே ஈரோடு கஸ்பா பேட்டை பகுதியில் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு, முள்ளம்பரப்பு பகுதியில் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் உள்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை 2வது நாளாக தொடர்ந்து நீடித்து வந்தது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளிஆட்கள் உள்ளே அனுமதிக்கபடவில்லை. சோதனையில் கணக்கில் வராத ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதைப்போன்று சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 2வது நாளாக விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

Similar News