ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி!
ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி!
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பின்னர் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்கள் ஆர்வமுடன் செல்வதை பார்க்க முடிகிறது.
மாணவர்களின் நலன் கருதி கடந்த 2 நாட்களாக பாடம் நடத்தப்படாமல் அவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பன சில அறிவுறைகள் மட்டுமே வழங்கப்பட்டது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம், அம்பை அருகே அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில் தொழிலாளர்களின் குழந்தைகள் 15 பேர் மட்டும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், 10ம் வகுப்பு படிக்கும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி நேற்று திறக்கப்பட்டது. கல்வி எவ்வளவு முக்கியம் என்பது அந்த மாணவனை பார்த்தால் தெரியும். அந்த மாணவனுக்கா பள்ளியை திறக்க நடவடிக்கை எடுத்த கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.