கலப்பு திருமணம் செய்ததாக போலி சர்ட்பிக்கேட்டில் அரசுப்பணி.. ஆசிரியை மீது பாய்ந்த வழக்கு.!

கலப்பு திருமணம் செய்ததாக போலி சர்ட்பிக்கேட்டில் அரசுப்பணி.. ஆசிரியை மீது பாய்ந்த வழக்கு.!

Update: 2021-01-02 16:50 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுதா 35, இவர் கடந்த 2010ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்ததாக சான்றிதழ் பெற்றுள்ளார்.

மேலும், இதனை வைத்து கடந்த 2014ம் ஆண்டு கணினி ஆசிரியராகவும் பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். இவரது கல்வி சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ் தொடர்பாக கல்வி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் கலப்பு திருமணம் செய்ததாக போலியாக சான்றிதழ் பெற்றது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஆசிரியை சுதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் மீது கல்வி அலுவலர்கள் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News