மதமாற்ற வழக்கில் இளைஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் - ஏன்?

Update: 2022-09-02 01:13 GMT

கோயம்புத்தூரில் தனது மகன் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதியவரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்து வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்தது. தனது மகன் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதை எதிர்த்த இந்து முதியவரைக் கொல்ல சதி செய்ததாக ஆதாரம் இல்லை என்று கூறி முஸ்லிம் இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் இதுபோன்ற குற்றச்சாட்டை பயங்கரவாத செயல் என்று கூற முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

இஸ்லாம் மதத்திற்கு மாறுவதை எதிர்த்ததால்தான் அவரைக் கொல்ல வேண்டும் என்பது நோக்கமாக இருந்தால், அந்த நடவடிக்கையை ரகசியமாக வைத்திருப்பதுதான் செயல்பாடாக இருந்திருக்கும். இதில் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினர். 

Input From: The hindu 

Similar News