தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Update: 2021-01-12 14:01 GMT

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News