ஈரோடு மாவட்டத்தில் கனமழை.. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் கனமழை.. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.!

Update: 2021-02-21 12:31 GMT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 333 கனஅடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக வினாடிக்கு 512 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 6 ஆயிரத்து 333 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இன்றை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.87 அடியாகவும், நீர் இருப்பு 25.6 டி.எம்.சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதே போன்று இன்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Similar News