பணப்பட்டுவாடா செய்தால் 1950 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.. சத்யபிரதா சாகு தகவல்.!

பணப்பட்டுவாடா செய்தால் 1950 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.. சத்யபிரதா சாகு தகவல்.!

Update: 2021-02-26 18:28 GMT

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு வெளியிட்டார். இதனிடையே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கூறினார். சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறினார்.
 

Similar News