தமிழ் கடவுள் அவமரியாதை.. திருமாவளவனின் எம்.பி., பதவியை பறிக்க இந்து முன்னணி கோரிக்கை.!

தமிழ் கடவுள் அவமரியாதை.. திருமாவளவனின் எம்.பி., பதவியை பறிக்க இந்து முன்னணி கோரிக்கை.!

Update: 2021-01-09 19:13 GMT

தமிழ் கடவுளை தொடர்ந்து அவமரியாதை செய்யும் திருமாவளவனை கண்டித்து, கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் தைப்பூச திருவிழாவிற்கு விடுமுறை அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு பற்றி பேசிய திருமாவளவன், முருகன் தமிழ் கடவுள் என்றால் விநாயகர் எப்படி இந்தி கடவுளானார் என்றும், ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் எப்படி வேறுபாடு உள்ளவர்கள் ஆனார்கள் எனவும் சர்ச்சயை£ன கருத்துகளை வெளிப்படுத்தினார்.

இந்த கருத்து இந்துக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருமாவளவனின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னணி அமைப்பினர், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தொடர்ந்து இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகின்ற திருமாவளவனை வன்மையாக கண்டிப்பதாகவும், அவருடைய எம்.பி., பதவியை பறிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், திருமாவளவன் சேர்ந்துள்ள கூட்டணி கட்சிக்கு ஓட்டளிக்கக்கூடாது எனவும் அவர்கள் முழக்கங்கள் இட்டனர். இந்த சம்பவத்தால் கோபி பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Similar News