விநாயகர் கோவிலில் திருமணம் செய்த கி.வீரமணியின் மகன் - ஊருக்கு தான் உபதேசமா?
காதல் திருமணத்தை ஏற்காத தந்தையை எதிர்த்து விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்
கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்ற திராவிட இயக்க தலைவர்கள் பிற குடும்ப பெண்களின் தாலியை தான் கழற்றுவார்கள் என்றும் தங்கள் குடும்பத்தினரை கழுத்தில் தாலியும் நெற்றியில் குங்குமும் மிளிர மங்களகரமாக வைத்திருப்பார்கள் என்றும் பலரும் விமர்சிப்பது உண்டு. இதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்ததாக அண்மையில் பா.ஜ.கவில் இணைந்த கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
பா.ஜ.கவில் இணைந்த பின் சென்னை திருவான்மியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் கூறியதாக சில தகவல்களை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாத்திகம் பேசும் திராவிட தலைவர்கள் போலிகள் என்றும் திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணியின் மகனுக்கே பிள்ளையார் கோயிலில் தான் திருமணம் நடந்தது என்றும் அவர் கூறியது தெரியவந்துள்ளது.
#ஓசிசோறுவீரமணி#ஓசிபிரியாணிதிமுக pic.twitter.com/ke5tl6idVx
— Vibin Raj 🇮🇳 (@VibinRaj_0224) August 15, 2018
இந்த திருமணத்துக்கு தான் உதவியது குறித்து கராத்தே தியாகராஜன் விரிவாக தெரிவித்துள்ளார். வீரமணியின் மகன் அன்பு ராஜு. இவர்தான் தற்போது திமுகவின் துணைத் தலைவராகவும் பெரியார் அறக்கட்டளையின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவர் மலையாளப் பெண் ஒருவரை காதலித்ததாகவும் அவர்களது காதலை வீரமணி ஏற்கவில்லை என்றும் கலப்புமணம் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அவர்களை பிரிப்பதற்காக ஆட்களை அனுப்பியதாகவும் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
வீரமணியிடம் இருந்து தப்ப தியாகராஜனின் உதவியை அன்பு நாடியதாகவும் அவர்கள் மறைந்திருக்க தான் உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முயன்ற போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கடலூரில் பதிவு திருமணம் செய்ய முயன்றபோது கலப்புத் திருமணம் என்பதால் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்ய முடியும் என்று பதிவாளர் கூறியுள்ளார்.
இதனால் ஏதாவது ஒரு கோவிலில் திருமணம் செய்து அதற்கான சான்றிதழையும் தருவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கோவிலில் நடக்கும் திருமணங்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகரின் அனுமதி மற்றும் ஒப்புதலும் தேவை. இதற்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த தியாகு தயங்கியதாக கூறப்படுகிறது.