விருதுநகரில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்.!

விருதுநகரில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்.!

Update: 2021-02-15 11:18 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அலுவலகத்தை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும், அலுவலகத்தில் உள்ளே வைக்கப்பட்ட குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மேலும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசந்தி மான் ராஜ் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் சுபாஷிணி, மற்றும் மாவட்ட கவுன்சிலர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News