மறைந்த தமிழ் பண்பாடு ஆராய்ச்சியாளர் பரமசிவன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் அஞ்சலி.!

மறைந்த தமிழ் பண்பாடு ஆராய்ச்சியாளர் பரமசிவன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் அஞ்சலி.!

Update: 2020-12-26 09:36 GMT

நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையை சேர்ந்தவர் தமிழ் பண்பாடு ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பரமசிவன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பரமசிவன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உடன் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கணேசராஜா, மாவட்ட ஆவின் பெருந்தலைவர் சுதா.கே பரமசிவம், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் ஜெரால்டு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவரது உடலுக்கு பேராசிரியர்கள் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Similar News