நெல்லையில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜலட்சுமி.!

நெல்லையில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜலட்சுமி.!

Update: 2021-01-21 15:36 GMT

நெல்லை மாவட்டம், மானூர், சுத்தமல்லி பாரதியார் நகரில் மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். 

இந்த விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மினி கிளினிக்கால் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் கூறினார். தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News