கல்யாணராமனை கொலை செய்ய ஜமாத்தில் ஆலோசனை செய்யும் முஸ்லீம்கள்.!

கல்யாணராமனை கொலை செய்ய ஜமாத்தில் ஆலோசனை செய்யும் முஸ்லீம்கள்.!

Update: 2021-02-03 19:08 GMT

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து பிரதமர் மோடியை அவதூறான வகையில் சித்தரித்து முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

இதனை கண்டிக்கும் வகையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தினை கலைக்கும் விதமாக முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இதனால் ஆர்ப்பாட்டம் திடீரென்று வன்முறையாக மாறியது.

இதனையடுத்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி சமூக வலைதளத்தில் தவறான கருத்தை பதிவிட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 

இந்நிலையில், பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை கொலை செய்வதற்காக முஸ்லிம் அமைப்புகள் ஜமாத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் கூட்டத்தில் பேசியதாவது: நாங்கள் பாக்கெட்டில் கர்ச்சீப் மட்டும் வைக்க மாட்டோம். ஆயுதமும் வைத்திருப்போம். நடுரோட்டில் கல்யாணராமனை வெட்டி வீசுவோம் என ஆவேசமாக பேசி வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அது போன்றவர்கள் மீது தமிழக போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பது சாதாரண பொதுமக்களின் விருப்பமும் ஆகும்.
 

Similar News