புதிய வகை கொரோனா.. கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதலமைச்சர் ஆலோசனை.!

புதிய வகை கொரோனா.. கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதலமைச்சர் ஆலோசனை.!

Update: 2020-12-23 09:25 GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இருப்பினும் கடந்த மாதம் ஊரடங்கை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை விதித்தார்.

இந்நிலையில், பிரிட்டவில் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் வந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழகத்திற்குள் அந்த வகையான வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பொது முடக்கம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா என ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Similar News