கன்னியாகுமரி துணை ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: தலைமறைவான தீவிரவாதியை வளைத்துப் பிடித்த NIA!
கன்னியாகுமரி துணை ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு: தலைமறைவான தீவிரவாதியை வளைத்துப் பிடித்த NIA!
கத்தார் நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த பொழுது இந்த கைது நிகழ்ந்துள்ளது என தேசிய புலனாய்வு நிறுவனம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளது.
NIA arrests absconding accused in Police Sub-Inspector Wilson Murder Case of Tamil Nadu pic.twitter.com/f1kd8B4k6g
— NIA India (@NIA_India) January 6, 2021
சிறப்பு துணை ஆய்வாளர் வில்சனின் கொடூரமான கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 6 ISIS பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. வில்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அப்துல் ஷமீம், ஒய் தோவ்ஃபீக், காஜா மொஹிதீன், மஹ்பூப் பாஷா, எஜாஸ் பாஷா மற்றும் ஜாஃபர் அலி ஆகியோர் மீது 120 பி, 302, 353 மற்றும் 506 (ii) IPC, யுஏ (பி) சட்டம், 1967, பிரிவு 16, 18, 18 பி, 20, 23, 38 மற்றும் 39, மற்றும் ஆயுதச் சட்டத்தின் 25 (1 பி) (அ) மற்றும் 27 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
SSI வில்சனின் கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணையில், அவரது கொலைகாரர்கள் "சுயமாக-அறிவிக்கப்பட்ட ஜிஹாதிகள்" என்பது தெரியவந்தது, அவர்கள் தங்கள் ISIS கூட்டாளிகளான முகமது ஹனீப் கான் (29), இம்ரான் கான் (32) மற்றும் முகமது ஜைத் (24) ஆகியோர் ஜனவரி 2020ல் பெங்களூரில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டதிற்கு பழிவாங்குவதற்காக வில்சனைக் கொன்றனர்.
பெங்களூரில் தங்கள் ISIS சகாக்கள் கைது செய்யப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, மறுநாள் இரவு 9:30 மணியளவில் தமிழ்நாட்டின் காளியக்கவிலையில் உள்ள பதந்தலமூடு சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் வில்சனை சுட்டுக் கொன்றனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த குற்றவாளிகள், தவுபீக் மற்றும் அப்துல் ஷமீம் ஆகியோர் CCTV காட்சிகள் மூலம் போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர். இதில் ஷமீம், 2014 ஆம் ஆண்டில் இந்து முன்னானி தலைவரின் கொலை வழக்கில் ஜாமீன் வாங்கிய பின்னர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.