மக்களின் தேவையை யோசித்து ஆட்சி செய்யும் பிரதமர் மோடிதான் - நிர்மலா சீதாராமன்

'மக்களுக்கு என்ன தேவை என்பதை யோசித்து பிரதமர் மோடி உழைத்து வருகிறார்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2022-07-31 09:15 GMT

'மக்களுக்கு என்ன தேவை என்பதை யோசித்து பிரதமர் மோடி உழைத்து வருகிறார்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் வலுவாக உள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர் முன்னேற்றம் அடைந்த பல நாடுகளின் பொருளாதாரமே கூட இன்று பின்தங்கிய நிலைக்கு செல்லும் சூழலில் உலக அளவில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா திகழ்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று சவாலை எதிர்கொண்ட போதிலும் வலுவான பொருளாதரத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசினார்.


Source - Polimer News

Similar News