எங்கள் கோரிக்கை ஏற்கவில்லை.. திட்டமிட்டபடி இந்த நாள் முதல் லாரிகள் ஓடாது.!

எங்கள் கோரிக்கை ஏற்கவில்லை.. திட்டமிட்டபடி இந்த நாள் முதல் லாரிகள் ஓடாது.!

Update: 2020-12-19 18:50 GMT

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் வருகின்ற 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கூட்டாக தெரிவித்துள்ளது.

சென்னையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், வாகனங்களுக்கு பொருத்தப்படும் ஸ்பீடு கவர்னர் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் லாரிகள் இயங்கும். இதன் பின்னரும் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அனைத்து லாரிகளும் இயங்காது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Similar News