சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் கைது.!

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் கைது.!

Update: 2021-02-18 09:43 GMT

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. அங்கு கடந்த 12ம் தேதி திடீரென்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இதுவரை 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு தொடர்பான பட்டாசு ஆலை குத்தகைக்காரர்கள் 2 பேர் உட்பட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் பட்டாசு ஆலை தொடர்பான விசாரணை விரிவாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Similar News