பெற்றோர்கள் ஒரு வழியாக சம்மதம்.. தமிழகத்தில் இந்த நாளில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு.!

பெற்றோர்கள் ஒரு வழியாக சம்மதம்.. தமிழகத்தில் இந்த நாளில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு.!

Update: 2021-01-06 14:08 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இடையில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வருகின்ற 18ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வந்தது. தற்போது முன்பை விட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் பள்ளிகள் திறக்க சாதகமான சூழல் இதுதான் என்று சொல்லப்படுகிறது. இதற்கான முயற்சியை கடந்த நவம்பர் மாதமே அரசு முன்னெடுத்திருந்த நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்கப்பட்டு பின்னர் அந்த முடிவானது கைவிடப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கியது. பொங்கலுக்கு பின்னரும் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் நாளை மாலைக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வருகின்ற 18ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறபப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.

பெற்றோர்களும் எப்படா பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏங்கி கொண்டுள்ளனர். வீட்டில் செய்யும் சேட்டைகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது. இதனால் பிள்ளைகளை சமாளிக்க முடியாமல் பல பெற்றோர்கள் இருப்பதை காணமுடிகிறது.

Similar News