பேரறிவாளன் விடுதலை.. அரசியல் விமர்சகர் பரபரப்பு தகவல்.!

பேரறிவாளன் விடுதலை.. அரசியல் விமர்சகர் பரபரப்பு தகவல்.!

Update: 2021-01-21 17:42 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் 30 வருடங்களாக அடைப்பட்டுள்ளார். அவரது விடுதலையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்று உச்சநீதிமன்றத்தில் அவருடைய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் வழக்கறிஞர் ஆஜராகி நீதிபதியிடம் கேள்வி எழுப்பினார். பேரறிவாளன் விடுதலையில் மத்திய அரசு எந்த மாதிரியான பதிலை தாக்கல் செய்யும் என கூறினார்.

இதனையடுத்து பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநரே முடிவு எடுப்பார் என பதில் மனுத்தாக்கல் செய்தது. இதனால் அவர் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரசியல் விமர்சகர் டாக்டர் சும்ந்த்.சி.ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இன்னும் சில வாரங்களில் பேரறிவாளன் மட்டும் சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Similar News