ஜன.,17 முதல் போலியோ சொட்டுமருந்து.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.!

ஜன.,17 முதல் போலியோ சொட்டுமருந்து.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.!

Update: 2021-01-08 12:07 GMT

வருகின்ற ஜனவரி 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கப்படுவது வழக்கம். தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சொட்டு மருந்து வழங்கப்படும்.

இந்த மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை வரை செயல்படும். மேலும் போக்குவரத்து வசதி இல்லாத ஊர்களில் நடமாடும் செவிலியர்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்க அரசு சார்பில் ஏற்படுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News