அரசியல் நிலவரம்! ரஜினி மக்கள் மன்றம் பரபரப்பு அறிக்கை வெளியீடு!

அரசியல் நிலவரம்! ரஜினி மக்கள் மன்றம் பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Update: 2021-01-18 15:20 GMT

ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது.

இப்படிக்கு நிர்வாகி 
வி.எம். சுதாகர்

சென்னையில் 3 மாவட்டங்களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர். இதன் காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மன்ற நிர்வாகிகள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

Similar News