பெண்களிடம் ஆபாச கேள்வி.. யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் அதிரடி கைது.!

பெண்களிடம் ஆபாச கேள்வி.. யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் அதிரடி கைது.!

Update: 2021-01-12 16:08 GMT

சென்னையில் யூடியூப் சேனலுக்காக பெண்களிடம் ஆபாசமாக கேள்வி எழுப்பிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். யூடியூப் சேனல் நடத்துபவர்கள் சிலர் அத்துமீறி செல்வது தொடர்கதையாக உள்ளது. யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம். அரசு சார்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதன் காரணமாக பலரும் சேனலை நடத்தி வருகின்றனர்.

சிலர் நன்மைகளை எடுத்து சொல்லும் விதத்தில் சேனலை நடத்தி வருகின்றனர். சிலர் பொய்யான தகவலை பரப்புவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வியாபார நோக்கத்திற்காக என்றாலும் சமூதாய சீர்த்திருத்தம் என்று உள்ளது. அதனை கடைப்பிடித்தால் அனைவருக்கும் நன்மையே. அந்த வகையில் சமீபத்தில் யூடியூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி எடுத்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், அதே யூடியூப்« சேனலைச் சேர்ந்த சிலர் கருத்து கேட்பதாக கூறி பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு பதில் கூறுமாறு தொல்லை கொடுத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற சாஸ்திரி நகர் போலீசார் பேட்டி எடுத்த இளைஞர், கேமராமேன் ஆகியோரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது கேமராவில் மிகவும் ஆபாசமான கேள்விகளை பெண்களிடம் கேட்டது பதிவாகியுள்ளது.

பொது இடங்களில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது போன்றவர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News