நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவரின் ஜாமீன் ஒத்திவைப்பு.!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவரின் ஜாமீன் ஒத்திவைப்பு.!
நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்னரே மருத்துவம் படிக்க முடியும். இதனால் அனைத்து மாணவர்களும் நீட் தேர்விற்காக கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் அதில் ஒரு சிலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு இருந்து சில மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீட் தேர்வின்போது கேரளாவை சேர்ந்த ரஷீத் என்ற மாணவன் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இதனையடுத்து ரஷீத் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன்மனுவை நீதிமன்றம் பிப்ரவரி 24ம் தேதி (புதன்கிழமை) ஒத்திவைத்தது.