அர்ஜூன் ‘மாக் 1 ஏ’ ராணுவ பீரங்கி வாகனத்தை ராணுவத்திற்கு அர்பணித்த பிரதமர்
அர்ஜூன் ‘மாக் 1 ஏ’ ராணுவ பீரங்கி வாகனத்தை ராணுவத்திற்கு அர்பணித்த பிரதமர்
தமிழகத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வருகை புரிந்துள்ளார். சென்னை, ஆவடியில் தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜூன் மாக் 1 ஏ ராணுவ பீரங்கி வாகனத்தை பிரதமர் மோடி ராணுவத்திற்கு அர்ப்பணித்தார். மேலும், மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைத்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் மற்றும் தேமுதிக, பாமக, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் அரசு உயர் அதிகாரிகள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.