நெல்லையில் நீடிக்கும் கனமழை.. குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.!

நெல்லையில் நீடிக்கும் கனமழை.. குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.!

Update: 2021-01-13 13:36 GMT

நெல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப் படையினர் மீட்டு வேறு இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

மேலும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News