தமிழகத்தில் 5 நாட்கள் மழை தொடரும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் 5 நாட்கள் மழை தொடரும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Update: 2021-01-07 09:16 GMT

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழக முழுவதும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இரவு பகல் பாராமல் பெய்து வரும் கன மழையினால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நேற்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, நாகப்பட்டினம், தருமபுரி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையினால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News