ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை.!

மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிகிறார். இதனை தொடர்ந்து கார் மூலமாக ஆளுநர் மாளிகையில் சென்று தங்குகிறார்.

Update: 2021-03-09 02:35 GMT

மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிகிறார். இதனை தொடர்ந்து கார் மூலமாக ஆளுநர் மாளிகையில் சென்று தங்குகிறார்.

நாளை காலை ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் சென்னை பழைய விமான நிலையம் சென்று, அங்கிருந்து வேலூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்குள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.


 



இதனை முடித்துக்கொண்டு தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னை மற்றும் வேலூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News