குடியரசு தின விழா.. மெரினாவில் முப்படையினர் ஒத்திகை.!

குடியரசு தின விழா.. மெரினாவில் முப்படையினர் ஒத்திகை.!

Update: 2021-01-24 12:20 GMT

இந்திய குடியரசு தினவிழா வருகின்ற 26ம் தேதி வருவதையொட்டி சென்னை மெரினாவில் முப்படையினர் ஒத்திகையில் ஈடுப்பட்டனர். இந்திய குடியரசு தினவிழா வருகின்ற 26ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இதே போன்று அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார்கள். இதற்கான ஒத்திகையில் முப்படையினர் நாடு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையொட்டி ஜன., 20,22,24 ஆகிய தேதிகளில் மெரினாவில் அணிவகுப்பு ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது.

அதே போன்று ராணுவத்தை சேர்ந்த முப்படையினர் அணிவகுப்பு நடத்தினர். இதில் தமிழக போலீசார், சி.ஆர்.பி.எப். உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

Similar News