அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.!

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.!

Update: 2021-02-25 11:55 GMT

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110வது விதியின் கீழ் பல்வேறு வகையான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் பணிபுரிகின்ற அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு பெறுகின்ற வயது 60 ஆக உயர்த்தப்படுகிறது.

இது 2021 மே 31ம் தேதிக்குள் ஓய்வு பெறுகின்ற அனைவருக்கம் இந்த புதிய ஓய்வு வயது செல்லும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருந்து வந்த நிலையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என கூறினார். இந்த அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

Similar News