சென்னையில் கடலுக்கு அடியில் திருமணம் செய்த காதல் ஜோடிகள்.!

சென்னையில் கடலுக்கு அடியில் திருமணம் செய்த காதல் ஜோடிகள்.!

Update: 2021-02-01 18:18 GMT

சென்னையில் காதல் ஜோடிகள் கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருவண்ணாலையை சேர்ந்தவர் சின்னதுரை, இவர் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் பணியாற்றிய ஸ்வேதா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இதனிடையே இருவர் வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.

இதனிடையே இருவருக்கும் கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொள்ள விருப்பமாக இருந்தது. இதனால் புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரிடம் முறையாக கற்றுக்கொண்டனர்.

பின்னர் சின்னதுரை, ஸ்வேதா திருமணம் இந்து கலாச்சாரப்படி நீலாங்கரை கடற்கரையில் 60 அடி ஆழத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. ஆகாயத்தில் பறந்தபடியே திருமணம் செய்துள்ளதை பார்த்துள்ளோம். தற்போது நீருக்கடியிலும் திருமணம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Similar News