சென்னையில் பொங்கல் திருநாளை கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்.!

சென்னையில் பொங்கல் திருநாளை கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்.!

Update: 2021-01-15 12:51 GMT

சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு, ஸ்ரீ நவசக்தி கடம்பாடி சின்னம்மன் கோயிலில், 11ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று சிறப்பித்தார். கோயிலுக்கு வந்திருந்த மோகன் பாகவத்திற்கு பிரசன்ன நரசிம்ம பெருமாள் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் வழிபாடு செய்தார். அதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடந்த கோ பூஜை மற்றும் பொங்கல் பூஜையிலும் பங்கேற்றார். இதன் பின்னர் விழாவில் பேசியதாவது: பொங்கல் நாளில் பூஜைகள் செய்வதுடன், நமக்கு உதவியர்களுக்கு நன்றி செலுத்தி, நம்மை சுற்றி இருப்பவர்களுடன், இனிதான உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 

தீயவையை பேசக்கூடாது, அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News