எஸ்.பி.பி., மருத்துவர் சாந்தா, முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்.!

எஸ்.பி.பி., மருத்துவர் சாந்தா, முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்.!

Update: 2021-02-03 11:06 GMT

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று (2ம் தேதி) ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று 2ம் நாள் கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அப்போது தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியதற்காக தமிழக அரசை பாராட்டினார்.

இந்நிலையில், இன்று 2வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தாவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உட்பட 22 பேருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
 

Similar News