பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்து விட்ட நிலையில், மீண்டும் அனைத்து தரப்பு மக்களும் இன்று வேலைக்காக சென்னைக்கு செல்வார்கள். அது போன்றவர்களுக்காக போக்குவரத்துத்துறை சார்பில் 1,867 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதேபோன்று மற்ற ஊர்களில் இருந்து 9 ஆயிரத்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.