20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளீர்களா? உங்களுக்கு சிறப்பான வாய்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-09-24 11:25 GMT

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் 2001 மற்றும் 2002ம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களில் 3வது செமஸ்டர் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் 2002 மற்றும் 2003ம் கல்வியாண்டில் முதல் பருவத்தில் சேர்ந்து தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Zee Business

Tags:    

Similar News