சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

Update: 2021-01-09 16:08 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வருகின்ற 12, 13ம் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மீண்டும் 16, 17ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதே போன்று வருகின்ற 11ம் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து கோவைக்கு புறப்படும். மீண்டும் மறு மார்க்கமாக 17ம் தேதி இரவு 8 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு நாளை 10ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News