சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலை.? சிறை நிர்வாகம் தகவல்.!

சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலை.? சிறை நிர்வாகம் தகவல்.!

Update: 2020-12-17 17:27 GMT

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா சிறைக்கு சென்ற முதல் மாதம் முழுவதும் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்து வந்தார். நாளடைவில் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் சகஜமாக பழக ஆரம்பித்தார்.

கன்னம் கற்றுக்கொள்வது, சிறை முழுவதும் தொட்டிகளில் காளான் வளர்த்து வருவது போன்ற பணிகளை தினமும் செய்து வந்துள்ளார். தன்னுடைய மன அழுத்தம் முழுவதும் போய்விட்டதாக சிறை நிர்வாகத்திடம் கூறியிருந்தார். தற்போது விரைவில் சசிகலா வெளியே வருவார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு அளித்து இருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக சிறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
 

Similar News