சிறை கைதிகள் விளைவித்த கரும்புகள்.. விற்பனை அமோகம்.!

சிறை கைதிகள் விளைவித்த கரும்புகள்.. விற்பனை அமோகம்.!

Update: 2021-01-13 18:22 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறைக் கைதிகளால் விளைவிக்கப்பட்ட கரும்புகள் விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில், கரும்புகள் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. முற்றிலும் இயற்கை முறையில் இதனை விளைவித்துள்ளனர். நல்ல விளைச்சலும் வந்துள்ளதால் கைதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே கரும்புகள் விற்பனைக்காக அறுவடை செய்யப்பட்டு சிறை வளாகத்தில் உள்ள அங்காடி, திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் பெண்கள் சிறை உள்ளிட்ட 4 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

வெளியில் கரும்பின் விலை 40 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், சிறைச் சாலையில் விளைவிக்கப்பட்ட கரும்பு ஒன்றின் விலை 20 ரூபாய் என 10 கரும்புகள் அடங்கிய கட்டு ஒன்று 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அதிகளவு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தள்ளுபடி விலையில் கட்டு ஒன்று, 180 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Similar News