தமிழக சட்டப்பேரவை பிப்., 5ம் தேதி வரை நடைபெறும்.!

தமிழக சட்டப்பேரவை பிப்., 5ம் தேதி வரை நடைபெறும்.!

Update: 2021-02-02 15:15 GMT

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் அரசின் சாதனைகள் குறித்து ஆளுநர் உரையாற்றினார்.

ஆளுநர் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும்போதே திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 5ம் தேதி வரை நடைபெறுகிறது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

Similar News