தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சற்று கூடுதலாக இருக்கும் நிலையில், வருகின்ற 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சற்று கூடுதலாக இருக்கும் நிலையில், வருகின்ற 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 6ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் எனவும், 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என கூறப்பட்டுள்ளது.